மகனுடன் வேலை பார்த்து கொண்டிருந்த தந்தை….! நொடியில் துடிதுடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2025

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் ஸ்டீபன். இந்த நிலையில் சுரேஷ் தனது மகனுடன் இணைந்து வள்ளியூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஏணியை தூக்கி நிறுத்திய போது ஏணி எதிர்பாராத விதமாக மின் வயர் மீது உரசியது.

இதனால் மின்சாரம் பாய்ந்து சுரேஷ், ஸ்டீபன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்