தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை தங்கள் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
அதேசமயம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த முறை வெற்றிவாகை சூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாற்று கட்சி நிறை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிகவில் இட்ட கட்சிகளில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து அதிமுக உறுப்பினர் அட்டையை சிவி சண்முகம் வழங்கினார்.
