பேரவையில் தமிழக வெற்றிக்கழக கூட்ட பரப்புரையின்போது கரூரில் நெரிசலால் உயிரிழப்பு குறித்து இபிஎஸ் பேசியதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “இன்றைக்கு சட்டமன்றத்தில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிச்சாமி. கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என்று கனவு காண்கிறார்.
இரவில் துரிதமாக அரசு எடுத்து நடவடிக்கையாக தான் பல பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய முதலமைச்சரின் சாதனை துணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
