தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களும் விற்கப்படுகின்றன என்று கூறியுள்ளது அமலாக்கத்துறை.
மேலும் இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது என்றும், அந்த பணம் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தினந்தோறும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
