தெலுங்கானா மாநிலம் கோத்தகோட்டா பகுதியை சேர்ந்த குந்தா சுரேஷ் மற்றும் சஹானாலா தம்பதியின் மகள் சிந்துவுக்கும் நிகித் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு நிகித் தனது மனைவியுடன் அவரது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புது மருமகனுக்கு 60 வகையான இனிப்புகள், 30 வகையான பேஸ்ட்ரிகள், பத்து வகையான அரிசி உணவுகள் உட்பட சுமார் 101 வகையான உணவுகளை அவருடைய மாமியார் பரிமாறி அசர வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 101 உணவுகளில் ஒன்று குறைந்தாலும் தங்க நாணயம் வழங்குவதாக அவருடைய மாமியார் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உணவுகளை நிகித் இருமுறை எண்ணிப் பார்த்தபோது நூறு வகையான உணவுகள் இருந்ததால் அவரது மாமியார் தங்க நாணயத்தை பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
