தமிழகத்தில் அக்டோபர் 1 சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையாகும். பிறகு அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனிடையே அக்டோபர் 3 ஆம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து.
இதனால் அக்டோபர் மூன்றாம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை என நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதி பொது விடுமுறை என செய்திகள் வருவது வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அது வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியின் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
