2024-25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக தீபாவளி போனஸ் கிடைக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31ஆம் தேதியில் பணியில் இருக்கும் மற்றும் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் ஒரு ஆண்டு முழுவதும் வேலை செய்யவில்லை என்றால் அவர் பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில் அதாவது விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும். பாராமிலிட்டரி படைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஊழியர்கள் இதில் பயனடைவார்கள்.
அதனைப் போலவே யூனியன் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடிய வேறு போனஸ் பெற தகுதி இல்லாத மத்திய அரசு ஊழியர்களும் இதில் பயன் பெறலாம். இந்த தீபாவளி போனஸ் பெறுவதற்கு மாதம் தோறும் அதிகபட்ச சம்பளமாக ஏழாயிரம் ரூபாய் என கணக்கீடு கொண்டு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
