தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் நடத்திய போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் விஷம பதிவை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை உடனே நீக்கியும் விட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி ஆர்.ராசா, வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டு ஆதவ் அர்ஜுனாவை விஜய் கட்சியை விட்டு நீக்காமல் தன்னுடன் வைத்திருப்பது ஏன்? இது இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய் நம்மால்தான் இது நடந்தது என்ற குற்ற உணர்வு இருப்பதால்தான் அவர் ஓடி ஒளிந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
