வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக மற்றும் தவெகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு எதிராக திமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து தவெக நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அப்போது வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது. காவல்துறையினர் கண்முன்னே இருதரப்பினரும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
