மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ் ஃபாரப் என்ற 22 வயது வாலிபர் சில சமூக மற்றும் மனநல பிரச்சனையால் மனமுடைந்து போயிருந்தார். இவர் ஸ்டேர்கேசில் அமர்ந்து நேரம் செலவழித்துள்ளார். 11வது தளத்தில் அமர்ந்து கொண்டிருந்த இவர் பாதுகாப்பு சுவருக்கு அருகில் சென்று வெளியே தொங்கிய போது கையை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார். எதிர்கட்டிடத்திலிருந்து ஒரு பார்வையாளர் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்த நிலையில், பதினோராவது தளத்தில் சுவரில் தொங்கும் அந்த வாலிபரின் உருவம் தெளிவாக தெரியவில்லை.
இது உடனடியாக சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் காண்போரை பதற வைத்துள்ளது. உடனே தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அந்த வாலிபர் கையை விட்டதும் கீழே விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். மீட்பு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சம்பவம் முடிந்ததால் அவருக்கு உதவ முடியவில்லை. சிலரை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இதயத்தில் வெளியாகி கார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
डोंबिवलीत एक धक्कादायक घटना घडली आहे. ११व्या मजल्यावरून उडी मारून एका तरुणाने आयुष्य संपवलं. या घटनेचा व्हिडीओ सोशल मीडियावर व्हायरल झाला आहे.#dombivli #maharashtra #CrimeNews pic.twitter.com/u9AQECUZhP
— Lokmat (@lokmat) September 27, 2025
