கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி டேவிட்சன், ” 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை விஜய் கடந்துவர 2 மணி நேரம் ஆனது. பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட ஊர்களை விட கரூரில் தவெக பரப்புரைக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 50 மீட்டர் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி அதை கூறியும் மறுத்துவிட்டனர்” என்றார்.
