“கூகுளில் மாத்திரை பார்த்து கருவை கலைச்சிடு” இல்லனா… ஹோட்டல் ரூமில் வைத்து தாலி கட்டிய காதலன்… வயிற்றில் பிள்ளையோடு கதறி அழுத காதலி….!

By Nanthini on புரட்டாதி 27, 2025

Spread the love

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று உள்ளார். அங்கு தன்னுடன் உடற்பயிற்சி செய்யும் கிஷோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு ஹோட்டல் அறையில் வைத்து அர்ச்சனாவுக்கு கிஷோர் தாலி கட்டி திருமணம் செய்து உள்ளார். மேலும் அர்ச்சனாவை ஏமாற்றி கிஷோர் பலமுறை உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் பல இடங்களுக்குச் சென்று நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால் அர்ச்சனா கர்ப்பமான நிலையில் கருவை கலைக்க சொல்லி கிஷோர் மற்றும் அவருடைய அக்கா யாழினி இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் அர்ச்சனா கிஷோரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாக்குவாதம் செய்துள்ளார். தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு கிஷோர் தான் தந்தை என்று கண்டிப்பாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு கிஷோரின் அக்கா, கூகுளில் ஏதாவது மாத்திரை பார்த்து நீயாக கருவை கலைத்துவிடு இல்லை என்றால் நாங்கள் அந்த குழந்தையை பிறக்க விடாமல் செய்து விடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளார்.

   

அது மட்டுமல்லாமல் கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்த நிலையில் தன்னை ஏமாற்றிய கிஷோர் மீதும் கருவை கலைக்க சொல்லி மிரட்டிய அவருடைய அக்கா மீதும் அர்ச்சனா போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலைக்கழிப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அர்ச்சனா கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கிஷோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டது உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.