தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது செப்டம்பர் 27 நாளை முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது
