டெல்லி ஜாமியா நகரில் இசைப்பள்ளி ஆசிரியர் (70) ஒருவர் தன்னுடைய மனைவி (65), மகன் (45) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மகனுக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் பாங்காங்கில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவர் தன்னுடைய தொலைபேசி மூலம் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட நிலையில் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் போன் செய்தும் எடுக்காததால் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் சென்று விசாரிக்க கூறியுள்ளார்.
உறவினர் வீட்டுக்கு சென்று பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அவரின் சகோதரர் பேச்சு குரல் மட்டுமே கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது உள்ளே ஒரு அறையில் அவரின் தாயார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடல் அழுக தொடங்கி இருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையின் கீழே கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நான்கு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இறந்த உடலுடன் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விசாரித்த போது, அப்பா அம்மா இருவரும் தூங்கிக் கொண்டு இருக்காங்க என்று சொல்லி உள்ளார். உயிரிழந்த தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது
