சென்னையில் பொது போக்குவரத்துக்கு சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிங்கார சென்னை அட்டையின் மூலமாக பேருந்து மற்றும் மெட்ரோ பயணங்களில் பயணச்சீட்டை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே OR பயண சீட்டு மூலமாக ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று (chennai one) செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 22 இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலமாக பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ் நேர இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும். UPI அல்லது கட்டண அட்டைகள் மூலமாக பயண சீட்டு பெறலாம். இந்தியாவில் முதல்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் இந்த செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆகிய இரண்டு தளங்களிலும் செயல்படும். ஒரே பயண பதிவின் மூலமாக அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பழமொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பயண சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி மூலமாக எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
