நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை மாநாடு நடத்தினார். தற்போது சனிக்கிழமை தோறும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக தேர்தல் பரப்புரை ஆற்றினார். தற்போது திருவாரூரில் பச்சை துண்டுடன் பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய்.
அப்போது பேசிய அவர், “நண்பா இது சும்மா கூட்டமா..? எல்லோரும் நீங்க ஓட்டு போட மாட்டீங்கனு சொல்றாங்க.. உண்மையாவா..? நண்பா உன்னை தான் கேட்கிறேன்.. கேட்குதா..? திருவாரூர்னா ஆழித்தேர் தான் உடனே நியாபகத்துக்கு வரும். திருவாரூர் தேர்னா சும்மாவா. மேலும் தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், மிரட்டி பார்க்குறீங்களா CM சார்? என கேள்வி எழுப்பினார். ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார், நீங்களா? இந்த விஜய்யா? என பார்த்துக் கொள்வோம்’ என பேசினார்.
