தமிழகத்திற்கு காலையிலேயே வந்த அலர்ட்…. 19 மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை…!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.