தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் செங்கோட்டையன் விவகாரத்தில் ஈபிஎஸ் இறுதி முடிவு எடுத்துவிட்டார் என்று தெரிகிறது. தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்கள், ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களை கடத்தியவர்கள், ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் ஆகியோரை சேர்க்கவே முடியாது என்ற ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என்ற திட்டவட்டமாக இபிஎஸ் கூறிவிட்டார். அப்படி என்றால் அவர்களை சேர்க்க வேண்டும் என்ற சொல்லும் செங்கோட்டை எனக்கும் அதே நிலைதான் என தெரிகிறது.
