திடீர் திருப்பம்… மீண்டும் NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது புதிய புயலை கிளப்பி உள்ளது. இப்படியான நிலையில் ஓபிஎஸ் அடுத்த கட்ட நகர்வு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என்று சென்னையில் இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு ஓபிஎஸ் கூறியுள்ளார். மீண்டும் NDA கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை, எதுவும் நடக்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நயினார் நாகேந்திரனிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் NDA கூட்டணியில் மீண்டும் இணையலாம் என கூறப்படுகிறது.