பல கோடி சொத்துக்கு சொந்தக்காரி… ஆனா இது மட்டும் செய்யவே மாட்டாங்களாம்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மிருணாள் தாகூர்…!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

சின்னத்திரையில்  நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் நடித்து வந்த இவருக்கு சீதாராம் படம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பல கோடி சொத்து வைத்திருக்கும் இவர் ஆடை குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை. எத்தனை விலை கொடுத்து வாங்கினாலும் அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கி கிடக்கிறது. நான் வாங்கியதிலேயே அதிக விலை கொண்டது 2000 ரூபாய்க்கு வாங்கியது மட்டுமே. திரைப்பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவேன். ஆனால் அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை. விலை உயர்ந்த ஆடைகள் வாங்க எனக்கு விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.