டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோகினி பகுதியில் நடந்த இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஹினி பகுதியில் வசிக்கக்கூடிய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பள்ளியின் மாணவிகள் நான்கு பேர் அவரை எதிர்த்து நின்று தாக்கியுள்ளனர். அந்த மாணவியை பிளேடால் கீறியதால் முகம் மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனையில் காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் நடத்திய மாணவிக்கும் இடையே ஒரு மாணவனுடன் பேசியதற்கான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேலி மற்றும் கிண்டல் நிலை அதிகரித்து அது ஒரு கட்டத்தில் தாக்குதலாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் 14 வயது மாணவி தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் இடையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
दिल्ली के रोहिणी जिला अमन विहार थाना इलाके के रोहिणी सेक्टर 20 लाल बिल्डिंग स्कूल के छात्र को लड़कियों ने एक लड़की हे गाल और कंधे पर मारा नुकीली चीज लड़की घायल CCTV आया सामने @CPDelhi @LtGovDelhi @CMODelhi @PMOIndia @dcprohinidelhi @HMOIndia pic.twitter.com/Bl3br2rtIj
— journalist PRINCE JAISWAL (@JournalistPRIN3) September 11, 2025
