ஐடிஆர்(ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஏற்கனவே ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டதால் இதற்கு மேல் அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது. எனவே கடைசி நேர அவசரத்தை தவிர்ப்பதற்கு அனைவரும் விரைவில் ITR தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்றால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள. மேலும் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு விவரங்கள், கணக்கு எண்கள் மற்றும் IFSC குறியீடுகள் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவை பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அவசியம்.
