சென்னையை பொறுத்த வரையில் நிலம் வாங்குவது என்பது இன்று சவாலான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த பிறகு சிலர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்த நந்தகுமார் என்ற நபர் facebook மூலமாக வந்த நில விளம்பரத்தை நம்பி 1200 சதுர அடி நிலம் வாங்குவதற்கு 92 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
அவருக்கு சட்டப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உண்மையில் அந்த நிலம் மற்றொருவருக்கு சொந்தமானது என பிறகுதான் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நந்தகுமார் நடித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மணலி புதுநகர் சையது சலாவுதீன் , எருக்கஞ்சேரி அபூபக்கர், வெங்கடேசன், அம்பத்தூர் கலீல் ரகுமான், கொடுங்கையூர் அப்துல் ரசாக் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்தனர். இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை தங்களுடைய பெயரில் மாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் வீட்டுமனை அல்லது நிலம் வாங்க விரும்புவோர் பட்டா, சிட்டா மற்றும் வரி ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரி பார்க்க வேண்டும் எனவும் நில மோசடியை தவிர்க்க இசி பதிவு மூலமாக சோதனை செய்வது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்த மோசடி சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது
