டிஜிட்டல் கேமின் நிறுவனத்தில் 70 சதவீத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 500 ஊழியர்கள். பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளை அரசு தடை விதித்ததை தொடர்ந்து பல நிறுவனங்களில் இது போன்ற நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறி வருகின்றனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஊக்குவித்தல், ஒழுங்குபடுத்துதல், மற்றும் திறன் சார்ந்த விளையாட்டுகளை மட்டும் நடைமுறையில் வைக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது . தற்போது பணம் செலுத்தி விளையாடுவோம் ஆன்லைன் கேம்களை தடை செய்துள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் செயல்படுவதை தடுத்து விளம்பரப்படுத்து வதையும் தடை செய்துள்ளது. மீறியும் விளம்பரம் படுத்தினால் ரூபாய் 50 லட்சம் அபராதமாம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமாம். பணவர்த்தனைகளை எழுதாக்கினால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றம் செய்து கொண்டே இருந்தால் மூன்று முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படுமாம்.
