அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி கடன் கிடையாது.. அரசு திடீர் அறிவிப்பு..!!!

By Divyamayakannan on புரட்டாதி 8, 2025

Spread the love

சென்னை, போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் . தமிழகத்தில் நாலு மண்டலத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை சார்ந்த பணியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பல காலங்களாகவே போக்குவரத்து பணியில் உள்ள ஊழியர்களுக்கு தேவைப்படும் போது கடன் வழங்கிய வருகிறது கூட்டுறவு சங்கம். மாதந்தோறும் கடன் மனுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது நாலு மண்டலங்களில் சேர்ந்த ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலையில் கூட்டுறவு சங்கம் உலகம்.

போக்குவரத்து கழகங்களில்  கடனுக்கான தொகையை மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்து வருவார்கள். கடந்த 9 மாதமாக போக்குவரத்து கழகம் சங்கத்திற்கு தவணை செலுத்தாமல் ரூ. 15 .26 கோடி  நிலுவை உள்ளதாம். அதனால் விழுப்புரம் போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த சங்கத்தின் மூலம் கிடைக்கும் கடன் மற்றும் சங்க கணக்கை முடிப்பது ஆகியவை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க போவதாக கூறியுள்ளது. நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.