இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு ஏற்படும் சில துயர சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குழந்தைகள் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணி நாமும் நம் வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் தரையில் கிடக்கக்கூடிய சிறிய பொருள் கூட குழந்தைக்கு சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஏராளம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது திருமங்கலம் அருகே ஒன்றரை வயது குழந்தை தைல டப்பா ஒன்றை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
