தமிழ்நாடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் பிரச்சாரமும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தேனியில் இன்று நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’என்ற பெயரில் பிரச்சாரம் செய்த அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது. ஆடுதுறை பேரூராட்சியில், தலைவர் மீது வெடிகுண்டு வீசி இருக்கிறார்கள். அருகிலிருந்த பலரும் படுகாயம் அடைந்துள்ளார்கள். நூலலையில் உயிர்த்தப்பிய பேரூராட்சித் தலைவர்.
திமுக ஆட்சியில் சிறுமிகளில் முதல் பாட்டிகள் வரை எவருக்குமே பாதுகாப்பு இல்லை. நேற்று இரவு 11:45 மணிக்கு குடிநீர் பைப்பை மூன்று நபர் உடைத்ததாக ஒரு பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் வந்த போலீசாரை அந்த மூன்று நபர்களும் அடித்துக் கதற விட்டிருக்கிறார்கள். போலீசுக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் காப்பது? குற்றவாளிகளுக்கு போலீசை பார்த்தால் பயமாக இல்லை. இதுவரை திமுக, அதிமுக கொண்டு வந்த சட்டத்தை மட்டும் தான் ரத்துச் செய்து இருக்கிறார்கள் வேறு எதையும் செய்ய காணோம்.
திமுக அரசு மக்களுக்காக உழைக்கவில்லை குடும்பத்திற்காக தான் உழைக்கிறது. விலைவாசி பற்றி எதுவும் கவலை இல்லை, அவர்களுடைய கட்சிக்காரர்களின் உயிருக்கே பொறுப்பில்லை, திமுக கட்சி இல்ல கம்பெனியா மாறிடுச்சு. அதிமுக ஜனநாயக கட்சி உழைத்தால் விசுவாசமாக இருந்தால் தொண்டர்கள் கூட பொதுச் செயலாளராக ஆகலாம், ஏன் முதல்வராக கூட மாறலாம். திமுகவில் வாரிசு கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு வாரிசு கட்சியை நிறுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். மக்களுக்கு தெரியும் யாருடைய ஆட்சி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியவை.
