BREAKING: திடீர் திருப்பம்…. அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சுக்குநூறாக நொறுங்கி கிடைக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு இபிஎஸ் தலைமையை கையில் எடுத்துக்கொண்டு மொத்த நிர்வாகத்தையும் பார்த்து வருகிறார். தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சசிகலாவை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு இன்றைய பேட்டியில் அவர் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க உள்ளதாக அவர் கூறுவது ஒன்றுபட்ட அதிமுகவை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.