அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்துள்ளது. அதுவும் இரண்டு மடங்கு அதிகம். 50 சதவீத வரி அமலுக்கு வரும்போது இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பெரிய அமெரிக்க நிறுவனங்களும் கவலைப்படுகின்றன. இந்நிலையில் இதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதனால் இனி ஹோட்டல்களில் பெப்சி, கோக், KFC போன்ற அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களையும் விற்பனை செய்யப்படாது. அதேபோல், ஸ்விக்கி, சொமோட்டோவை புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
