தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக பல பக்கங்களாக சிதறி கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இபிஎஸ் இடம் கொடுக்காமல் தனி ஆளாகவே நின்று கட்சியை வழிநடத்தி வருகின்றார்.
இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேச போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். அதாவது ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தான் செங்கோட்டையனும் ஐந்தாம் தேதி பேச உள்ளதாக தெரிகிறது.
