தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாஜகவில் உட்கட்சி பூசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதாவது 2024 தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்று சென்னை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைமுகமாக கூறியிருந்தார்.
அத்துடன் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே வார் ரூம் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே நாளை டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்கட்சி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
