மக்கள் அனைவரும் இந்த காலத்தில் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். கடைகளுக்கு போய் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அமேசான் இணையதளத்தில் எலக்ட்ரானிக், ஸ்மார்ட் போன்கள் இது போன்ற வீட்டு பொருட்களும் பெரிய தள்ளுபடியில் கொடுக்கப் போவதாகத் தகவல் வந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களே தயாராகிக் கொள்ளுங்கள்.
இன்று செப்டம்பர் மாதம் ஆரம்பித்து விட்டது. இன்றிலிருந்து தொடர் பண்டிகைகள் வரப்போகிறக் காரணத்தினால் தான் அமேசானில் இது போன்ற நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அமேசான் இணையதளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்று தொடங்கப்பட உள்ளது. ஆஃபர்கள் எந்த தேதியில் இருந்து வழங்கப்படும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமா அறிவிக்கவில்லை. ஸ்மார்ட்போன், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் , எலக்ட்ரிக் ஸ்டவ், லேப்டாப், கம்ப்யூட்டர் இது போன்ற பொருட்கள் சலுகை அறிவித்தது பெரிய நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏஐ அடிப்படையில் ஷாப்பிங் அனுபவம், ஃபாஸ்ட் டெலிவரி மற்றும் ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் கிடைக்கும்.
இந்த ஆஃபர்கள் மட்டும் இல்லாமல் (எஸ்பிஐ) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மேலும் 10% ஆஃபர் அதிகரிக்கும். எலக்ட்ரானிக் 80%, ஸ்மார்ட் போனில் ஆப்பிள், சாம்சங், ஒன் பிளஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு 40%, வீட்டு உபயோக பொருட்கள் 65%, சமையல் அறை பொருட்கள் 80%, அக்வாகார்ட், டைட்டன் இந்த பிராண்டுகளிலும் ஆஃபர் கொடுக்கப் போகிறார்கள். எப்பொழுதுமே பண்டிகை காலங்களில் இது போன்ற ஆஃபர்கள் கொடுப்பது வழக்கம் இருப்பினும் இந்த முறை 80% வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். அதனால் ஆஃபரை பயன்படுத்திக்கொண்டு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கித் தள்ளுங்கள்.
