திண்டுக்கல்லில் விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, “விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். ஆனால் சிலர் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அரசியல் பொது வாழ்விற்கு வந்துவிட்டால் அவர்கள் அனைத்து மதத்தினருக்கும், ஜாதியினருக்கும் சமமானவர்கள். ஹிந்து மதத்திற்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது துரோகம், ஹிந்துக்களுக்கு ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
காரணம் இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை. எம்ஜிஆர் போன்ற செல்வாக்கு மிகுந்த நடிகரை பார்க்க முடியாது. அவரையே கூத்தாடி என்று சொன்னார்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததும் அவரை மலையாளி என்று சொன்னார்கள். இன்று விஜயை கூத்தாடி என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர் கூத்தாடி என்று சொன்னதால் அவர் தோற்றுப் போகவில்லை. சிவனும் கூத்தாடி தான். கூத்தாடி என்றால் அவமானமா? உதயநிதியும் நடிகர் தான். அப்படி என்றால் அவரும் கூத்தாடிதான். துணை முதலமைச்சர் துணைக் கூத்தாடி என்று சொல்லலாமா? விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்” என்று பேசியுள்ளார்.
