ரூ.2500 ஆக உயர்வு… தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் அமல்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 29, 2025

Spread the love

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரணமாக நெல் குவிண்டாலுக்கு 2500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2545 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் வருகின்ற செப்டம்பர் 1 முதல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.