தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரணமாக நெல் குவிண்டாலுக்கு 2500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2545 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் வருகின்ற செப்டம்பர் 1 முதல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
