பொதுவாகவே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமாகும். ஆனால் சில நேரங்களில் பாதுகாப்பை மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதன்படி பீகார் மாநிலம் பூர்ணியா – அராரியா சாலையில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் நேற்று ராகுல் காந்தி மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அவருடன் பலரும் பங்கேற்ற நிலையில் பேரணியின் போது பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஓடி வந்த நபர் ஒருவர் திடீரென்று ராகுல் காந்தியின் கழுத்தை பிடித்து அவருடைய தோளில் முத்தமிட முயன்றார். உடனே பாதுகாப்பு பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.
அந்த இளைஞர் முகத்தில் அறைந்ததும் தாக்கப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ராகுல் காந்தியின் இடது தோளில் முத்தமிட்டதும் மீண்டும் அவரை நோக்கி நகர்ந்ததும் வீடியோவில் தெரிகின்றது. பிறகு பாதுகாப்பு பணியாளர்கள் அவரை கடுமையாக தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு வளையத்தை உடைத்து முக்கிய அரசியல் தலைவரை நெருங்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | Voter Adhikar Yatra: A man ran towards Congress MP Rahul Gandhi (@RahulGandhi) to greet him during a bike rally.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/syb61jPQrL
— Press Trust of India (@PTI_News) August 24, 2025
