தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்று செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் முக்கிய புள்ளிகள் பலரும் மாற்று கட்சிகள் இணைந்து வருகின்றன.
இந்நிலையில் 2026 தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல்லில் நேற்று இரவு ஜான்பாண்டியனின் தமமுக சார்பில் சமூக சமத்துவ மாநாடு நடந்தது. அதில் அதிமுக மூத்த தலைவர்கள், நயினார் நாகேந்திரன், ஜி கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் திமுகவை விமர்சித்த ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சி இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். மேலும் 2026 இல் தென் மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
