பாம்புகள் உண்மையிலேயே காத்திருந்து பழி தீர்க்குமா..? அறிவியல்பூர்வமான உண்மை இதுதான்..!!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாக்களில், நாகப்பாம்பு பழிவாங்குவது போன்ற காட்சிகளை பார்த்துதுள்ளோம். ஆனால் உண்மையாகவே பாம்புகள் பழிவாங்குமா என்று இந்தப் பதிவில் காண்போம். பெரியவர்கள் கூறுவார்கள் பாம்பு கண்ணுடா உனக்கு என்று. அதற்கு காரணம் பாம்புகளின் கண்கள் கேமராவை போல படங்கள் அனைத்தையும் சேமித்து வைக்குமாம். பாம்பின் நினைவாற்றல் மிகமிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நீண்ட நேரம் எதையும் நினைவில் வைத்திருக்க முடியாதாம். பாம்புகள் பழிவாங்கும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

பாம்புக்கு பழிவாங்கும் தன்மை இருக்கிறது இதுவெறும்  மூடநம்பிக்கையாக உள்ளது. அதேபோல் பாம்புகளுக்கு குறைந்த பார்வை தன்மை தான் உண்டு. அதன் உடல் அதிர்வு நாளையே இறைச்சியை உணர்கிறது. பாம்பு இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பார்க்கும் கடைசி பதிவையே நினைவில் வைத்திருக்குமாம். பாம்பின் கண்கள் அதன் மூளையின் செயல்பாட்டுகளை பொறுத்தே அமைந்துள்ளது. அதேபோல் பாம்பு இறந்த பிறகு மூளைச் செயல்படாது. அதனால் கண் திறந்திருந்தாலும் கூட எந்த படத்தையும் சேமிக்க முடியாது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாம்பு கேமராவை போல படத்தை சேமிக்கும் என்பதும், பழிவாங்கும் தன்மை உடையது என்பதும் வெறும் மூடநம்பிக்கையே.