1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! வருகிறது “FUTURE READY” புதிய திட்டம்.. தமிழக அரசு அதிரடி..!!!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த FUTURE READY என்ற புதிய  திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த பாடங்கள் தொடர்பாக மாதந்தோறும் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், தேர்வு நடத்தி மாணவர்களுடைய கல்வித் திறனை ஆசிரியர்கள் அறிய வேண்டும். இது மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாதாந்திர ” Future – ready ‘ பயிற்சி மாணவர்களுக்கான வினாக்கள் – வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.