ஒரு தலை காதல்… வீட்டுக்கே சென்று ஆசிரியரை பெட்ரோல் ஊற்றி எரித்த பள்ளி மாணவன்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆவணி 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் வயதுக்கு மீறிய சம்பவங்கள் தான் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் வெளியாக கூடிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. அதன்படி தான் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவன் பெற்றோர் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் நர்சிங் போரில் ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சூர்யன்ஷ் கோச்சார் என்ற அந்த மாணவன் டீச்சர் மீது ஒரு தலை காதலை வளர்த்து வந்துள்ளார்.

ஒரு நாள் புடவை கட்டி வந்த போது மாணவன் தவறாக பேசியதால் ஆசிரியர் அந்த மாணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக ஆசிரியை ஸ்மிருதி(26) வீட்டிற்கு கடந்த 18ஆம் தேதி பள்ளி மாணவர் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆசிரியர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.