இன்றைய காலகட்டத்தில் நாட்டின் எந்த மூலையில் திரும்பினாலும் தினம்தோறும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தான் காணப்படுகின்றன. காலை எழுந்ததும் செய்தியை பார்க்கும்போது ஏராளமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கண் முன்னே வந்து நிற்கிறது. பிறந்த குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை பாலியல் சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள்.
தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பட்டில் 11 மாத பெண் குழந்தையை 15 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டு சிறுவன் அடிக்கடி குழந்தையுடன் விளையாட வரும் விலையில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்று இந்த கொடூரத்தில் சிறுவன் ஈடுபட்டுள்ளான். இதனைக் கண்டறிந்த குழந்தையின் தந்தை அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.. 11 மாத பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் சிறுவன் செய்த இந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
