இப்படியே அடிச்சிகிட்ட எப்படி?.. சீக்கிரம் பஞ்சாயத்தை முடிங்கப்பா… கூட்டணிக்காக ரகசிய தூதுவிட்ட இபிஎஸ்…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ராமதாஸ் நடத்திய பொது குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் மேலும் இருவருக்கு இடையேயான மோதல் அதிகரித்தது.

இந்நிலையில் 2026 தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அதிமுகவுடன் பாஜக என்ற பெரிய கட்சி மட்டுமே இருப்பதால் வலுவான கூட்டணி இல்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால் விரைவாக பாமக, DMDK ஆகிய கட்சிகளை சேர்க்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமகவில் தந்தை மற்றும் மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணைந்து செயல்பட அன்புமணிக்கு இபிஎஸ் தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது