திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர. திருவிடம் காலமானார். பெரியாரின் தொண்டன், கருணாநிதி மற்றும் ஸ்டாலினை ஆதரவாளரான அவர் தேர்தல் நேரத்தில் திமுக வெற்றிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டவர். கலைஞரின் காலடி சுவடுகள், திமுக பெற்ற வெற்றிகளும் வீர தழும்புகளும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவரின் திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை நூலை உதயநிதி வெளியிட்டு இருந்தார். இவருடைய திடீர் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இவர் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
