தமிழக அரசு மக்களின் நலனுக்காக ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனால் மக்கள் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது மக்களின் உயிர்காப்பதற்காக அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி தகவல் கொடுத்தால் விரைவாக சேவை கிடைக்கும். அவசர தேவைக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
