தடையற்ற பயணத் திட்டமிடலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்திய ரயில்வே, சுற்று ப்பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் IRCTC என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும், திரும்பும் பயணங்களில் அடிப்படைக் கட்டணத்திலிருந்து 20 % தள்ளுபடி பெறலாம். இத்திட்டத்திற்கு ஆகஸ்ட் 14 முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 13 முதல் 26 வரை, திட்டமிடப்பட்ட அடுத்த பயணங்களுக்கு, பின் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரையிலான பயணங்கள் “இணைக்கும் பயணம்” அம்சத்தை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். முன்கூட்டியே முன்பதிவு செய்யும் காலம், திரும்பி வரும் பயணத்திற்கு பொருந்தாது.
இதை IRCTC இணையதளம் அல்லது மொபைல் ஆப்பிள் உள்ள ரயில்கள் மெனுவில், “பண்டிகை சுற்றுப் பயணத்திட்டம்” என்பதை தேர்ந்தெடுக்கவும். பயண டிக்கெட்டுகள் வரையறுக்கப்பட்ட பயண சாளரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு இந்த அமைப்பு தள்ளுபடி விலையில் திரும்ப வரும் டிக்கெட்டுகளை, முன் பதிவு செய்ய அனுமதிக்கும். இந்த அம்சம், பயண வகுப்பு, பயணத்தின் இரு கால்களிலும் மூல இலக்கு மற்றும் பயணிகளின் பட்டியல் சீராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், கடைசி நிமிட நெரிசலை குறைக்கவும், இந்தத் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு பயணங்களுக்கான மின்னணு முன்பதிவு சீட்டு, எளிதான குறிப்புக்காக PNR விவரங்களை காண்பிக்கும்.
இந்தத் திட்டம் வெளிப்படை தன்மையும், தெளிவையும் உறுதி செய்யும் என்பதை IRCTC அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இம்முயற்சி உச்ச நாள் டிக்கெட் கிடைப்பதில் உள்ள அழுத்தத்தை, குறைத்து நிலையான பயண நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.
