தமிழகத்தில் சுமார் 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரியில் 17 பள்ளிகளும், சிவகங்கையில் 16 பள்ளிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 12 பள்ளிகள், சென்னை, மதுரை மற்றும் ஈரோட்டில் 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தவிர கோவை, திருப்பூர், விருதுநகர், திருவண்ணாமலை, குமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
