தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற திட்டவட்டமாக கூறி வருகின்றது.
இப்படியான நிலையில் தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் அத்திக்கடவு நாயகன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை இதரை தெரிவித்தார். அண்மையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருந்தனர். அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம் அல்லது விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
