“ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால்” இப்படி நடந்திருக்காது..? அவர் குணம் எங்களுக்கு தெரியும்… அமெரிக்க வழக்கறிஞர் ஆதங்கம்..!!

By Soundarya on ஆவணி 11, 2025

Spread the love

ஜூன் 12, 2025 அன்று அகமதா பாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில் 166 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் 260 பேர் உயிரிழந்த சோகத்தில் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு கூட கிடைக்கவில்லை. 242 பேர் விமானத்தில் பயணித்தனர், 260 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஜூலை 18 வரை 128 குடும்பங்களுக்கு மட்டுமே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.  இந்த நிலையில் விபத்தில் பலியான அமெரிக்கர்கள் தரப்பு வழக்கறிஞர் மைக் ஆன்ட்ரூஸ் இதுகுறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

   

அதாவது ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ரத்தன் டாடா யார்? அவர் குணம் என்ன? என்பது எங்களுக்கு தெரியும்.  தன்னுடைய ஊழியர்களை கவனித்துக் கொள்வதில் அவர் காட்டிய முக்கியத்துவம் பற்றி நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்தார்.