கள்ள காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

By Divyamayakannan on ஆவணி 10, 2025

Spread the love

மனோஜ் என்பவர் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளன. ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவரம் கணவன் மனோஜ்க்கு தெரிய வந்துள்ளது. அவர் மனைவியிடம் நம் குழந்தைகளுக்காகவாது நீ செய்து வரும் தவறை கைவிட்டுவிடு என்று வலியுறுத்தி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்று உள்ளார். அப்போது ரூபி கள்ளக்காதலனுக்கு போன் செய்து என் கணவன் வெளியூர் வேலைக்காக சென்று விட்டான் நீ வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். பின் இருவரும் வீட்டிலே உல்லாசமாக இருந்துள்ளனர்.

திடீரென்று வீட்டுக்கு மனோஜ் வந்துள்ளார். தன் மனைவி வேறொருவனுடன் படுக்கையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். கோவத்தின் உச்சிக்கு போன அவர், இருவரையும் அறைக்குள்ளையே பூட்டிவிட்டு சிறிது நேரம் சிந்தித்துள்ளார். பிறகு கோபம் மறைந்து மனைவியின் பெற்றோர்களிடம் ஃபோன் செய்து வரவழைத்துள்ளார். அவர்களிடம் தன் மனைவி செய்யும் லீலைகளை கூறியுள்ளார். பின், இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கூறியுள்ளார். மாமனார் மாமியாரிடம் ஒப்புதலும் வாங்கி விட்டார். பின்பு மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார். இதை தொடர்ந்து மனோஜ் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். எனக்கும் உனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை, இனி என் வாழ்வில் வராதே நீ கண்காணாமல் போய் உன் புதிய கணவருடன் மகிழ்ச்சியாக இரு என்று ஒரு கடித ஒப்பந்தம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.