ஆசை ஆசையாய் வெளிநாடுக்கு புறப்பட்ட நண்பர்.. வழி அனுப்பச் சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி… நொடி பொழுதில் நடந்த சோக சம்பவம்..!

By Nanthini on ஆவணி 10, 2025

Spread the love

திருச்சியில் லால்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று காலை ஒரு காரில் அந்த வாலிபர் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஆறு வாலிபர்கள் காரில் சென்றிருந்தனர். இந்த கார் திருச்சி லால்குடி மெயின் ரோட்டில் சரஸ்வதி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் உடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலத்த காயமடைந்த நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50000 முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.