BREAKING: திடீர் திருப்பம்… பாமக தலைவர் பதவி இவருக்கு தான்… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகிறது. ராமதாஸின் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெறுகின்றது. அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் தரப்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்தின் பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றது மட்டுமல்லாமல் மேடையிலும் ராமதாஸ் அமர ஒரு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ராமதாஸ் இல்லாமல் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகின்றது.

இப்படியான நிலையில் தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் திமுக ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்த பாமக உறுதி ஏற்றுள்ளதாக கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கும் பொது குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாமக தலைவராக அன்புமணியின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவி யாருக்கு என போட்டி நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அன்புமணி தான் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.